அம்மா என்ற ஆளுமை மறைந்த பிறகு அடுத்து நம்ம அரசியல்தான் என்று இலவு காத்த கிளியாய் இருந்த தலைவர்கள் மத்தியில் , சுயநலத்திற்காக அடிமைகளாய் போன அரசியல்தலைவர்கள் கனவை *தகர்த்தெறிந்த வீர தலைவனாய்* உங்களை கண்டேன்.
தெளிவான சிந்தனையும், நேர்கொண்ட பார்வையும், எடுத்த முடிவில் இருந்து ஒரு போதும் பின்வாங்காமல், *தடுமாறாமல், தடம் மாறாமல்,* உன்னதமான உழைப்பையும், உண்மையுள்ள தலைவனாய் உங்களை கண்டேன்.
*தமிழக நலன்களை* சுயநலத்திற்காக அடகு வைத்து அடிபணிந்து இருக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு முதலில் களத்தில் இறங்கி போராடும் *போராளியாகவும் எதிர்த்து* நின்று குரல் கொடுக்கும் ஆளுமைக்கு ஓரு எடுத்துக்காட்டு நீங்கள்.
எத்தனையோ அடக்குமுறைகள் வந்தாலும் "என்னை 25 ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் மீண்டும் வெளியில் வந்து *மக்கள் நலனுக்காக அரசியல்* செய்வேன்" என்று முழக்கமிட்ட தலைவர்.
நீட் தேர்வில் உயிரிழந்த மாணவி அனிதா "என் அன்பு மகள் அனிதா" என ஆரத் தழுவிய பாசத்தில் *"அம்மாவின் வடிவில் ஒரு* அண்ணனை கண்டேன்"
"பூமிக்கு அடியில் வைரமே கிடைத்தாலும் ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டோம்" என்று *ஹைட்ரோகார்பன், மீத்தேன், கூடங்குளம் அணுமின் நிலையம், எட்டு வழி சாலை* போன்ற பல திட்டங்களுக்கு எதிராக போராடி விவசாயத்தை காக்கவும், மக்களின் நீராதாரத்தை காப்பாற்ற காவேரி நீருக்காக குரல் கொடுத்த தலைவர்.
கல்வி பயிலும் *மாணவர்களுக்காக மூன்றாம்* வகுப்பு, ஐந்தாம் வகுப்பு பாடத்திட்ட மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேவையில்லை என்றும் மேலும் தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டபோது அதை ஆராய ஒரு சிறப்பு குழுவை அமைத்து *கல்விக்கொள்கையில்* செய்யவேண்டிய திருத்தங்களை செய்து பொது அறிக்கை சமர்ப்பித்த தலைவர்.
துண்டு சீட்டு எழுதி கொடுத்தாலும் உளறும் தலைவர்கள் மத்தியில் தான் சொல்லும் வார்த்தையில் *புன்சிரிப்போடு ஊடகங்களை* எதிர் கொள்ளும் சாமர்த்தியம் உள்ள தலைவர்.
*புரட்சி தலைவர்* போல செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் நின்றாலும் அவர்கள் குறையை கேட்டு முயன்ற உதவியை உடனே செய்யும் தலைவர்.
ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரத்திற்குமேல் உழைக்கும் ஆற்றளுடன் " *எனக்கு பின்னாலும்* 100 ஆண்டுகள்" என்ற அம்மாவின் ஆசையை 1000 ஆண்டுகள் வரை செயல்படுத்தும் தொலைநோக்கு பார்வை உள்ள தலைவர்.
*இளைஞர்களின் எழுச்சி* நாயகனாய், எளிய தலைவனாய், அனைவருக்கும் சுயமரியாதை அளிக்கும் *நல்ல மனிதராய்,* இருப்பதால் தான் என்னவோ எனக்கு மட்டுமல்ல கோடான கோடி இளைஞர்கள் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கின்றார்கள்.
எனக்கு பிடித்த மக்கள் செல்வர் என்பதை விட " *மக்களால் நான்; மக்களுக்காக நான்"* என்று வாழும் மக்களுக்கு பிடித்த மக்கள் செல்வர்.
நன்றி *Mrs.N.M. சங்கீதா, B.sc(CS), M.S(IT), M.Phil(CS) HDCA,(Ph.D(CS)). தகவல் தொழில் நுட்ப பிரிவு(மகளிர் ), வட சென்னை வடக்கு மாவட்டம்.



