உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் போட்டியிட புதிய சட்டத்திருத்தம்...


 


சென்னை:


உள்ளாட்சித் தேர்தலில் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளும் நகர்ப்புறங்களில் போட்டியிடலாம் என அரசு சட்டத்திருத்தம் செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதி தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில் இருந்தது. இந்நிலையில் அதில் திருத்தம் செய்யப்பட்டு தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

சம உரிமை தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் உள்ளாட்சித் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


போட்டியிடலாம் தமிழக மொத்த மக்கள் தொகையில் 3 % பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் செவி திறனற்ற, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் பணியில் ஆர்வமிருப்பின் அவர்களும் இனி தேர்தலில் களம் கண்டு கலக்க முடியும்.



Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image