உள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் போட்டியிட புதிய சட்டத்திருத்தம்...


 


சென்னை:


உள்ளாட்சித் தேர்தலில் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளும் நகர்ப்புறங்களில் போட்டியிடலாம் என அரசு சட்டத்திருத்தம் செய்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.


தமிழகத்தில் இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அரசாணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சட்டத்திருத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு நகர்ப்புறங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விதி தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில் இருந்தது. இந்நிலையில் அதில் திருத்தம் செய்யப்பட்டு தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

சம உரிமை தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் உள்ளாட்சித் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் சம உரிமை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


போட்டியிடலாம் தமிழக மொத்த மக்கள் தொகையில் 3 % பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் செவி திறனற்ற, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். இந்நிலையில் மக்கள் பணியில் ஆர்வமிருப்பின் அவர்களும் இனி தேர்தலில் களம் கண்டு கலக்க முடியும்.



Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image