மூங்கில் விதை முளைக்க நேரமாகும் .. ஆனால் வளர்ச்சி மூங்கில் காடாகும் ..


 


ஒரு சீன விவசாயி மூங்கிலை விதைத்தான்.
அதற்க்குத் தண்ணீர் ஊற்றினான். உறம் போட்
டான். நாள்தோறும் தண்ணீர் ஊற்றினான். ஒரு
மாதமாயிற்று. அங்குஎதுவும் முளைக்கவில்லை.
இரண்டு மாதமாயிற்று, ஒன்று மில்லை. ஓர் ஆண்
டாயிற்று ஒன்றுமில்லை. எல்லாரும் கிண்டலும்,
கேலியும் செய்தார்கள். நாள் தவறாமல் நீர் ஊற்றி
வந்தான். இரண்டாண்டுகளாகியும் ஒன்றுமில்லை.
மூன்றாண்டாகியும் ஒன்றுமில்லை. குடும்பத்தார்,
மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளோர் அனைவரும்
கிண்டலும், கேலியும் செய்தனர்.



ஐந்தாண்டிற்குப் பிறகு முளைவிடத் துவங்கியது.
விவசாயி பார்த்தமாத்திரத்தில் மகிழ்ச்சியில் பாடி
னான், ஆடினான். கிராமத்தில் உள்ளோரை அழைத்
தான். எல்லாரும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.


வளர்ந்தது, வளர்ந்தது, வளர்ந்தது, எப்படி
வளர்ந்தது என்றால் 6-வாரத்தில் 90-அடி உயரத்
திற்கு வளர்ந்தது. பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
மற்றவர்களும் வளர்க்கத் துவங்கினார்கள்.


மூங்கில் விதை நிலத்திற்கு மேல் முளைவிட்டு
வளர ஐந்தாண்டு காலத்தை ஏன் எடுத்துக் கொண்
டது என்றால், 90 அடி உயரம், அடர்த்தியான மரங்கள்
இவை எந்தப் புயலாலும் மழையாலும் எந்தவித பாதி
ப்பும் ஏற்படாமல் இருக்க, பூமிக்கடியில் பரவலாகவும்
ஆழமாகவும் வேர்களைச் செலுத்தி தன்நிலையை
உறுதி படுத்தியப் பிறகு பூமிக்குமேல் வளர்ச்சிப்
பணியை செய்திருக்கிறது. வேர்களை ஊன்ற
ஐந்தாண்டுகளை எடுத்துக் கொண்டது.


நம் கழகமும் நாமும் ஆட்சி கட்டில் நோக்கி முன்னேற வேண்டுமென்
றால் திட்டமிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
சோதனைகளை நடத்திப் பார்க்கவேண்டும். அதற்கு
நிறைய காலங்களை எடுத்துக் கொள்ளலாம். வெற்றிகளை உறுதி செய்துக் கொண்டு செயல்
பட்டால் முன்னேறுவது நிச்சயம்.TTV எனும் நான் என்ற வார்த்தையை கேட்க ஏங்கும் என் காதுகள்...



Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image