மூங்கில் விதை முளைக்க நேரமாகும் .. ஆனால் வளர்ச்சி மூங்கில் காடாகும் ..


 


ஒரு சீன விவசாயி மூங்கிலை விதைத்தான்.
அதற்க்குத் தண்ணீர் ஊற்றினான். உறம் போட்
டான். நாள்தோறும் தண்ணீர் ஊற்றினான். ஒரு
மாதமாயிற்று. அங்குஎதுவும் முளைக்கவில்லை.
இரண்டு மாதமாயிற்று, ஒன்று மில்லை. ஓர் ஆண்
டாயிற்று ஒன்றுமில்லை. எல்லாரும் கிண்டலும்,
கேலியும் செய்தார்கள். நாள் தவறாமல் நீர் ஊற்றி
வந்தான். இரண்டாண்டுகளாகியும் ஒன்றுமில்லை.
மூன்றாண்டாகியும் ஒன்றுமில்லை. குடும்பத்தார்,
மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளோர் அனைவரும்
கிண்டலும், கேலியும் செய்தனர்.



ஐந்தாண்டிற்குப் பிறகு முளைவிடத் துவங்கியது.
விவசாயி பார்த்தமாத்திரத்தில் மகிழ்ச்சியில் பாடி
னான், ஆடினான். கிராமத்தில் உள்ளோரை அழைத்
தான். எல்லாரும் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.


வளர்ந்தது, வளர்ந்தது, வளர்ந்தது, எப்படி
வளர்ந்தது என்றால் 6-வாரத்தில் 90-அடி உயரத்
திற்கு வளர்ந்தது. பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
மற்றவர்களும் வளர்க்கத் துவங்கினார்கள்.


மூங்கில் விதை நிலத்திற்கு மேல் முளைவிட்டு
வளர ஐந்தாண்டு காலத்தை ஏன் எடுத்துக் கொண்
டது என்றால், 90 அடி உயரம், அடர்த்தியான மரங்கள்
இவை எந்தப் புயலாலும் மழையாலும் எந்தவித பாதி
ப்பும் ஏற்படாமல் இருக்க, பூமிக்கடியில் பரவலாகவும்
ஆழமாகவும் வேர்களைச் செலுத்தி தன்நிலையை
உறுதி படுத்தியப் பிறகு பூமிக்குமேல் வளர்ச்சிப்
பணியை செய்திருக்கிறது. வேர்களை ஊன்ற
ஐந்தாண்டுகளை எடுத்துக் கொண்டது.


நம் கழகமும் நாமும் ஆட்சி கட்டில் நோக்கி முன்னேற வேண்டுமென்
றால் திட்டமிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
சோதனைகளை நடத்திப் பார்க்கவேண்டும். அதற்கு
நிறைய காலங்களை எடுத்துக் கொள்ளலாம். வெற்றிகளை உறுதி செய்துக் கொண்டு செயல்
பட்டால் முன்னேறுவது நிச்சயம்.TTV எனும் நான் என்ற வார்த்தையை கேட்க ஏங்கும் என் காதுகள்...



Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image