முனிவர்கள் வாக்கு பொய்யாகாது... நம்பிக்கையுடன் போராடினால் வெற்றி நமதே...ஒரு குட்டிக் கதை





 


ஒரு ஊரில் ஒரு சக்திவாய்ந்த முனிவர் இருந்தார் , அந்த ஊரில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த பக்தனிடம் ஒரு இடத்தை காண்பித்து இங்கு தோண்டினால் உனக்கு புதையல் கிடைக்கும் என்று கூறி மறைந்தார்..


உடனே பக்தன் அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தான். சிறிது கஷ்டமாக இருந்தது. 10 அடி தோண்டி விட்டான். எதுவும் கிடைக்கவில்லை. சிறிது நமபிக்கை இழந்தான். மேலும் 5 அடி தோண்டினான். இன்னும் கொஞ்சம் கடினமாக இருந்தது, எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து 3 அடி தோண்டினான். எதுவும் கிடைக்கவில்லை. சுத்தமாக நம்பிக்கை இழந்து விட்டான் . எதோ ஒரு வயசான ஆள் சொன்னத கேட்டு 18 அடி தோண்டி விட்டோம் என்று வருத்தத்துடன் முயற்சியை கை விட்டு சென்றான் .


சில நாட்கள் கழித்து , புதிதாக ஒரு ஆள் அந்த பக்கம் வந்தான். அவன் இந்த குழியை பார்த்து விவரம் கேட்டான். அருகிலிருந்தவர்கள் கூறியதை கேட்டான். முனிவர்கள் வாக்கு பொய்யாகாது என்று நினைத்து முழு நம்பிக்கையுடன்தோண்ட ஆரம்பித்தான் .2 அடி தோண்டியதும் டங் என்ற சத்தம் கேட்டது.மேலும் தோண்டினால் பெரிய பானை நிறைய பொற்காசுகளுடன் புதையல் கிடைத்தது .


இன்றும் அது போல சிலர் அவரசமாக புதையல் தேடியவனை போல் மக்கள் செல்வருடன் பயணித்து உடனடி பலன் கிடைக்கவில்லையே என அவநம்பிக்கையில் மாற்று இயக்கத்திற்கு ஓடுகின்றனர்.


ஆனால் இன்னும் சிறிது நாளில் வாக்கு சீட்டு மூலம் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது , சின்னம்மா அவர்கள் கர்நாடக சிறையில் இருந்து வெளி வந்து விடுவார்கள், ஆட்சி முடிந்து சட்டமன்ற தேர்தலும் வந்து விடும் மக்கள் செல்வருடனானபயணம் வீண் போகாது என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் சேர்ந்து பயணிக்கின்றனர்.மேலும் புதிதாக பல இளைஞர்கள் நம்பிக்கையுடன் இணைகின்றனர்.


இவர்கள் மக்கள் செல்வருடன் லட்சிய பயணத்தில் வெற்றி அடைவார்கள். அப்போது விலகி சென்றவர்கள் 18 அடி தோண்டி வருந்தியவனை போல் தங்கள் நிலையை எண்ணி வருந்துவார்கள்...









 





Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image