மீண்டும்: சாலையில் சரிந்த அ.தி.மு.க கொடிக்கம்பம்; தொடர்ந்து வந்த லாரி' - மருத்துவமனையில் கோவை பெண்..


 


மீண்டும்: சாலையில் சரிந்த அ.தி.மு.க கொடிக்கம்பம்; தொடர்ந்து வந்த லாரி' - மருத்துவமனையில் கோவை பெண்..




கோவையில் அ.தி.மு.க கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுராதா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பணிக்குச் செல்வதற்காக, அனுராதா தனது இருசக்கர வாகனத்தில் சின்னியம்பாளையம் கோல்டுவின்ஸ் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, போக்குவரத்துக்கு இடையூராக அ.தி.மு.க கட்சியின் கொடி கம்பம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


அனுராதா அந்த வழியே செல்லும்போது கம்பம் சரிந்து விழுந்துள்ளது. அதே நேரத்தில், அங்கு ஓர் லாரியும் வந்துள்ளது. இதையடுத்து அனுராதா மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது.



இதுகுறித்து அனுராதாவின் உறவினர்கள், ``அனுராதா அங்கு செல்லும்போது, அ.தி.மு.க கட்சி கம்பம் விழுந்துள்ளது. அதைத் தவிர்ப்பதற்காக அவர் பிரேக் போட்டுள்ளார். அப்போது வண்டி ஸ்லிப்பாகி கீழே விழுந்தவுடன், அந்த வழியே வந்த லாரி ராதாவின் கால் மீது ஏறிவிட்டது. தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.


ராதாவின் ஒரு காலில் எலும்பு வெளியே வந்துவிட்டது. மற்றொரு காலில் நரம்புகள் கட்டாகிவிட்டன. ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.


அந்தப் பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அ.தி.மு.க கொடிக்கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன.


ஏற்கெனவே கோவை ரகு, ஊட்டி பாபு, சென்னை சுபஶ்ரீ என்று பேனர் மற்றும் கொடிக் கம்பங்களால் அடுத்தடுத்து உயிர்பலி ஏற்பட்டுவிட்டன. ஆனால், அதிலிருந்து அ.தி.மு.க எந்தப் பாடமும் கற்கவில்லை என்பது அனுராதா விபத்தின் மூலம் தெரியவந்துள்ளது என வேதனை தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள்!!












Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image