ஊரக உள்ளாட்சி தேர்தல் மக்கள் செல்வர் வெளியிட்ட தகவல் தொண்டர்கள் உற்சாகம்


 


உள்ளாட்சி தேர்தல் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஆளுங்கட்சியினரின் லீலைகளால் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்களோடு நடந்து முடிந்து இருக்கின்றது.


 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆளும் கட்சியினர் வாக்குச் சாவடியில் நடந்துகொண்ட விதமும் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய வன்முறை வெறியாட்டங்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. 


 வாக்குப்பதிவு நாளன்று கூட பணத்தை தண்ணீராக செலவழித்து வாக்காளர்களை வளைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதை  பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் மக்களையும் ஜனநாயகத்தையும் ஒரு விளைபொருளாக பார்க்கிறார்கள்  என்ற வேதனையான உண்மை புரிகின்றது. 


 இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் தேர்தல் களத்தில் தேனீக்களால் சுழன்று களப்பணி ஆற்றியமைக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  


மேலும் இதே உத்வேகத்துடன் இரண்டாம் கட்ட தேர்தலையும் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image