ஊரக உள்ளாட்சி தேர்தல் மக்கள் செல்வர் வெளியிட்ட தகவல் தொண்டர்கள் உற்சாகம்


 


உள்ளாட்சி தேர்தல் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு ஆளுங்கட்சியினரின் லீலைகளால் பல்வேறு முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்களோடு நடந்து முடிந்து இருக்கின்றது.


 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஆளும் கட்சியினர் வாக்குச் சாவடியில் நடந்துகொண்ட விதமும் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய வன்முறை வெறியாட்டங்கள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறது. 


 வாக்குப்பதிவு நாளன்று கூட பணத்தை தண்ணீராக செலவழித்து வாக்காளர்களை வளைக்க ஆளுங்கட்சி முயற்சிப்பதை  பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் மக்களையும் ஜனநாயகத்தையும் ஒரு விளைபொருளாக பார்க்கிறார்கள்  என்ற வேதனையான உண்மை புரிகின்றது. 


 இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் தேர்தல் களத்தில் தேனீக்களால் சுழன்று களப்பணி ஆற்றியமைக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  


மேலும் இதே உத்வேகத்துடன் இரண்டாம் கட்ட தேர்தலையும் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image