தமிழருவி மணியனைவிட ரஜினி எனக்கு நெருக்கம் கூட்டணி குறித்து ரஜினியும் திரு டி டி வி தினகரன் அவர்களும் தான் முடிவெடுப்பார்கள் கழக பொருளாளர் திரு.வெற்றிவேல்


“தமிழருவி மணியனைவிட ரஜினி எனக்கு நெருக்கம்”-வெற்றிவேல்,Ex MLA


 “தமிழருவி மணியனின் பேச்சுக்கு என்ன காரணம், கூட்டணி தொடர்பாக ஏதேனும் பேச்சுவார்த்தை நடைபெற்றதா?”
“அதையெல்லாம் சொல்ல முடியாது. ‘ரஜினிகாந்த் டி.டி.வி.தினகரனோடு கூட்டணி அமைத்துக்கொண்டால், அது மக்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்’ என்று சொல்வதற்கு தமிழருவி மணியன் யார்? ரஜினியுடன் அ.ம.மு.க கூட்டணி வைக்கலாமா, வேண்டாமா என்று டி.டி.வி.தினகரன்தானே முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நான் பேச ஆரம்பித்தால் நிறைய பேச வேண்டியிருக்கும்.’’
“ஆனால், ‘ரஜினிக்கு நான் செய்தித் தொடர்பாளர் அல்ல’ என்று தமிழருவி மணியனே இந்தச் செய்தியை மறுத்திருக்கிறாரே?’’
“செய்தி வெளியாகி அடுத்த இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, ‘நான் அதைச் சொல்லவில்லை; இனிமேல் பேட்டியே கொடுக்க மாட்டேன்’ என்றெல்லாம் மறுத்திருக்கிறார். தமிழருவி மணியனைவிட ரஜினி எனக்கு நெருக்கம். நண்பர் என்பதற்காக ‘ரஜினி எப்போது கட்சி ஆரம்பிப்பார்’ என்பதையெல்லாம் நான் சொல்லக் கூடாது. நட்பு வேறு; அரசியல் வேறு.’’
“தினகரன் மற்றும் சசிகலாவைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடித்துவருகிறார் என்றொரு பேச்சு இருக்கிறதே?’’
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை இதுவரை விமர்சித்ததில்லை என்பது உண்மை. ஆனால், தினகரனை பெயர் குறிப்பிடாமல் பல இடங்களில் விமர்சித்திருக்கிறார்.’’


 “சசிகலா, அபராதத்தொகை 10 கோடி ரூபாயை இன்னும் செலுத்தவில்லை என்று செய்தி வெளியாகி யுள்ளதே?’’
“அதை கடைசி ஆண்டில்தான் கட்டுவார்கள். அந்தச் செய்தியை திட்டமிட்டுப் பரப்புகிறார்கள். இப்படி ஒரு தகவல் வெளியானால் அ.ம.மு.க-வின் ரியாக்‌ஷன் என்ன என்பதை அறியவே எங்களுக்குப் ‘பொறி’ வைக்கிறார்கள்.’’
“இதைச் செய்வது யார், மாநில அரசா... மத்திய அரசா?’’
“இதில் மாநில அரசு, மத்திய அரசு என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டு தரப்புகளுமே இருக்கின்றன.’’
“ஆனால், ‘சிறையில் சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படும் வழக்கில் சசிகலாவுக்கு கூடுதல் தண்டனை கிடைக்கும்’, ‘நன்னடத்தை விதிகள் சசிகலா வழக்குக்குப் பொருந்தாது’ என்றும் சொல்கிறார்களே?’’
“இதை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட வினய்குமார் தலைமையிலான கமிஷனில், ‘சசிகலா வாக்கிங் சென்றார், ஷாப்பிங் போனார் என்றெல்லாம் நான் சொல்லவேயில்லை’ என்று ஐ.ஜி-யான ரூபாவே மறுத்துவிட்டார். ‘சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது’ என்று நீதிமன்றம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.”
Thanks junior Vikatan


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image